கோலாலம்பூர், ஜன 9 – மத்திய தரவுத்தள மைய (பாடு) அமைப்பு தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜனவரி 7 நிலவரப்படி மொத்தம் 798,528 நபர்கள் இதில் பதிவு செய்துள்ளனர்.
சிலாங்கூர், ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் அதிக பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மலேசிய புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.
182,943 நபர்கள் சிலாங்கூரில் உள்ள பாடு வில் பதிவு செய்துள்ளனர், அதைத் தொடர்ந்து ஜொகூர் (85,975), மற்றும் சரவாக் (72,775) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களுக்குப் பதிவு திறந்திருக்கும். மேலும் பயனர்கள் அடையாள அட்டை எண், வீட்டு எண் மற்றும் குடியிருப்பு முகவரி உள்ளிட்ட 30 தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்கலாம் மற்றும் சரிபார்க்கலாம்.
இது கொள்கை திட்டமிடல் மற்றும் வள விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக இலக்கு வைக்கப்பட்ட அரசாங்க மானியங்கள் மற்றும் அதற்குத் தகுதியானவர்களுக்கு உதவி வழங்குதல் ஆகியவை ஆகும்.
- பெர்னாமா




