ஷா ஆலம், ஜன 8: நேற்று முதல் இன்று வரை ரொம்பின், பகாங்கில் ஆபத்தான அளவில் தொடர் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.
இன்று பெக்கான், பகாங் மற்றும் ஜொகூரில் (செகாமட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி) ஆகிய பகுதிகளில் மோசமான அளவிலான தொடர் கனமழை பெய்யும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மாரான், குவாந்தன், பெரா (பகாங்) மற்றும் தங்காக், மூவார், பத்து பஹாட், பொன்தியான், குலாய், ஜொகூர் பாரு (ஜொகூர்) ஆகிய இடங்களிலும் எச்சரிக்கை மட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெர்னாமா




