ALAM SEKITAR & CUACA

2023 இறுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று 52 விழுக்காடு அதிகரிப்பு

6 ஜனவரி 2024, 6:14 AM
2023 இறுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று 52 விழுக்காடு அதிகரிப்பு

ஜெனிவா, ஜன 6- கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக உலகளவில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை  52  விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய 28 நாள் காலக் கட்டத்துடன்  ஒப்பிடுகையில் கடந்த  நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 17 க்கும் இடையில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது,

உலகளவில் 850,000 புதிய கோவிட்-19 சம்பவங்கள்  பதிவாகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையும் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று  உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் ஜெனீவாவில் நடந்த ஐநா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் கோவிட்19 நோய்த் தொற்று தொடர்புடைய  3,000 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.