NATIONAL

கடந்தாண்டு நாடு முழுவதும் 598,635 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன

3 ஜனவரி 2024, 8:31 AM
கடந்தாண்டு நாடு முழுவதும் 598,635 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன

கோலாலம்பூர், ஜன 3: கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 598,635 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

அதில் 5,984 கோர விபத்துக்களில் 6,433 பேர் உயிரிழந்துள்ளனர் என புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) துணை இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி ஓமார் கூறினார்.

"மேலும், 2,331 கடுமையான விபத்துக்கள் மற்றும் 28,511 சிறிய விபத்துக்கள், மீதமுள்ளவை வாகனங்களுக்கு மட்டுமே சேதம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 173,129 விபத்துகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜொகூர் (87,370) மற்றும் கோலாலம்பூர் (72,701) ஆகியவை அடங்கும்.

சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான (2,092) இறப்புகளை பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜொகூர் (2,010) மற்றும் பேராக் (1,321) இடம்பெற்றுள்ளன.

ராயல் மலேசியன் காவல்துறையினர் நாடு முழுவதும் அனைத்து குழுக்கள் மற்றும் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையைப் புத்தாண்டு முதல் நாள் அன்று மேற்கொண்டது.

இந்த சோதனை நடவடிக்கையில் சாலைப் போக்குவரத்துத் துறை, தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம், சுற்றுச்சூழல் துறை மற்றும் மலேசியக் குடிவரவுத்துறை போன்ற பல்வேறு அமலாக்க அமைப்புகளும் கூடுதலாக 4,378 பிடிஆர்எம் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.