கோலாலம்பூர், ஜன 2- மத்திய தரவுத்தள மையத்தின் (படு) கீழ் சேகரிக்கப்பட்ட தரவுகளை பற்றி மலேசியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இது தற்போதுள்ள பல சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படும் ஓம்னிபஸ் பில் மூலம் பொறுப்பற்ற தரப்பினரின் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்று மலேசிய டிஜிட்டல் எக்னாமிக் கார்ப்பரேஷன் (எம்டிஇசி) தலைவர் சையட் இப்ராஹிம் சையட் நோ கூறினார்.
“எனவே, ஸ்கேம்கள் மற்றும் பலவற்றில் தரவு தவறாகப் பயன்படுத்தப்படும் சூழ்நிலை இருக்காது. இதுபோன்ற விஷயங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இருப்பதால், இப்போது அது எளிதாக நடக்காது என்றார்.
“ஓம்னிபஸ் பில் எங்கள் தரவு தனியுரிமையையும் நிர்வகிக்கும். எனவே இந்தத் தரவுகளின் மீது கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடு இருக்கும்,” என்று அவர் கூறினார்.
தரவுகளை தவறாக பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக தொடர்புடைய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாளை படுவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த அமைப்பு நாட்டின் முக்கிய பாதுகாப்பான, விரிவான மற்றும் கிட்டத்தட்ட நிகழ் நேர தரவுத் தளமாக இருக்கும். மேலும், இம்முறை நாட்டின் நிதி நிலையைச் சரிசமமாக வைத்திருக்க துல்லியமான பகுப்பாய்வுத் தரவை உருவாக்கவும், தரவு உந்துதல் கொள்கைகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையின் வரைவு மற்றும் கொள்கைகளை இலக்காகச் செயல்படுத்தவும் அனுமதிக்கிறது.
- பெர்னாமா




