காஸா, ஜன 1- மத்திய காஸா பகுதியில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாமில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் முன்னாள் வக்ஃப் மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் ஷேக் யூசுப் சலாமா கொல்லப்பட்டார்.
அல்-அக்ஸா பள்ளிவாசலில் சமயப் போதகராக இருக்கும் ஷேக் யூசுப்பின் இல்லத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்கியதாவும் இதன் விளைவாக அவர் உயிரிழந்ததோடு அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன செய்தி நிறுவனத்தின் (வாஃபா) நிருபர் கூறினார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலில் 21,650 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 56,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் சிறார்கள் மற்றும் பெண்களாவர். மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை இன்னும் காணவில்லை.








