ALAM SEKITAR & CUACA

கிளந்தான், திரங்கானுவில் வெள்ளம் தற்காலிக தங்குமிடங்களில்  தங்குபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது

16 டிசம்பர் 2023, 5:07 AM
கிளந்தான், திரங்கானுவில் வெள்ளம் தற்காலிக தங்குமிடங்களில்  தங்குபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது

கோலாலம்பூர், டிச.15 - இன்று இரவு  திரங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது, சிலாங்கூரில் நிலைமை பெரிதாக மாறவில்லை.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி திரங்கானுவில், இரண்டு மாவட்டங்களில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில் வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள்  109 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேராகக் குறைந்துள்ளனர், நேற்று  காலை 148 குடும்பங்களைச் சேர்ந்த 461 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

திரங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBNT) செயலகம் உலு திரங்கானுவில், 132 பாதிக்கப்பட்டவர்கள் கம்பொங் குனோங் மெனரோங்கில்  உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; கேஜி பெங்கலான் அஜல் (146), கேஜி கேமட் (39).

செத்தியூ மாவட்டத்தில் இரண்டு நிவாரண மையங்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ளன, அதாவது கம்பொங் பெசுட்டில் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சுராவ் மாக் பகாஸில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதை அடுத்து,  உலு திரங்கானுவில் நான்கு மற்றும் செட்டியூவில் உள்ள ஒன்று என மொத்தம் ஐந்து நிவாரண மையங்கள் இன்று மூடப்பட்டன.

கிளாந்தானில், இன்று காலை 336 குடும்பங்களைச் சேர்ந்த 1,201 பேருடன் ஒப்பிடும்போது, இன்று இரவு 8 மணி நிலவரப்படி 289 குடும்பங்களைச் சேர்ந்த 1,033 பேராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து பதிவாகியுள்ளது.

சமூக நலத் துறையின் (JKM) 'Info Bencana' இன்போ பெஞ்ஜான போர்ட்டலின் படி, கோலா கிராய் மற்றும் தனா மேராவுக்குப் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமீபத்திய மாவட்டங்கள் பாசீர் மாஸ் மற்றும் மாச்சாங் ஆகும், நான்கு மாவட்டங்களில் மொத்தம் 18 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இன்போ பென்ஜான 'Info Bencana' படி, சிலாங்கூரில், 34 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் இன்னும் SK ஜெயா செத்தியா மற்றும் கோலா சிலாங்கூரில் உள்ள பாரிட் மஹாங் சமூகக்கூடத்தில்  இரவு 9 மணி நிலவரப்படி தஞ்சமடைந்துள்ளனர், இன்று காலை 35 குடும்பங்களில் இருந்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வெள்ள பொது இன்போ. 'publicinfobanjir.water.gov.my' இணையதளத்தின்படி, மாநிலத்தில் உள்ள இரண்டு ஆறுகள், செலாட் முவாராவில் கிள்ளான் ஆறு , கிள்ளான் 3.02m மற்றும்  லாபூ ஆறு  கம்பொங் சாலாக் திங்கி 9.35m என ஆபத்தான நீர்மட்ட அளவீடுகளை பதிவு செய்துள்ளது. இரவு 8.15 மணி.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.