ஷா ஆலம், டிச.14: இன்று மதியம் ஜாலான் எஸ்பி3 பண்டார் சௌஜனா புத்ரா அருகே உள்ள ஏரியில் 15 வயது இளைஞன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டான்.

பிற்பகல் 1.12 மணியளவில் நீர் மீட்பு படை (பிபிடிஏ) உறுப்பினர்களால் இளைஞனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலாங்கூர் தீயணைப்பு நடவடிக்கைகளின் உதவி இயக்குனர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

தெலோக் பங்லீமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (பிபிபி) மற்றும் ஷா ஆலம் மற்றும் போர்ட் கிள்ளானிலிருந்து ஸ்கூபா குழுக்கள் உட்பட ஐந்து உறுப்பினர்கள் அவசர அழைப்பைப் பெற்ற பிறகு காலை 10.33 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் மேற்பரப்பில் தேடுதல் நடத்திய பிறகு, சடலம் கரையிலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில், ஐந்து மீட்டர் ஆழத்தில் ஆற்றின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

உடலை மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைப்போம் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.