கோலாலம்பூர், டிச 13: நேற்று கெரேதாப்பி தனா மெலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) லெம்பா கிளாங் மற்றும் மின்சார ரயில் (இடிஎஸ்) சேவைகள் தண்டவாளத்தின் அருகே கிரேன் விழுந்ததால் தடை ஏற்பட்டது.
இருப்பினும், சம்பவம் நடந்த இடத்தைக் கேடிஎம்பி அறிக்கையில் குறிப்பிடவில்லை. மேலும் இந்த சம்பவத்தால் ரவாங்-தஞ்சோங் மாலிம் வழித் தடத்திற்கான இரண்டு தடங்களும் தடைப்பட்டது என்று விளக்கியது.
அச் சம்பவத்தைத் தொடர்ந்து, தஞ்சோங் மாலிம்-கேஎல் சென்ட்ரல்-தஞ்சோங் மாலிம் செல்லும் பயணிகளின் சேவை செரெண்டாவில் நிறுத்தப்படும். அதே நேரத்தில் இடிஎஸ் சேவை பின்னர் அறிவிக்கப்படும்.
"இந்த சம்பவத்தைச் சரி செய்ய நேரம் தேவை. ஏனெனில் மேல்நிலை லைன் உபகரணங்கள் செயலிழந்துள்ளன" என்று அறிக்கை கூறுகிறது.
இதனால், ``Klang Valley Komuter`` சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்குச் சுங்கை பூலோவிலிருந்து செரெண்டாவிற்குச் சுற்றுப் பயணப் பேருந்து சேவையை கேடிஎம்பி வழங்குகிறது. கேஎல் சென்ட்ரல்-சுங்கை பூலோ-தஞ்சோங் மாலிம் வழி இடிஎஸ் பயணிகளுக்கானது.
"சூழ்நிலையின் சமீபத்திய முன்னேற்றங்களை அவ்வப்போது கேடிஎம்பி தெரிவிக்கும் மற்றும் சிரமத்திற்கு மன்னிக்கவும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா




