NATIONAL

சமூக வலைத்தளங்களில் காணப்படும் இ-மடாணி கிரெடிட் குறித்து பொதுமக்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

4 டிசம்பர் 2023, 3:58 AM
சமூக வலைத்தளங்களில் காணப்படும் இ-மடாணி கிரெடிட் குறித்து பொதுமக்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கோலாலம்பூர், டிச 4: சமூக ஊடக தளங்களில் பொறுப்பற்ற தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இ-மடாணி கிரெடிட் டைப் பண அல்லது 'பியேர்-டு-பியேர்' பரிமாற்றங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறு நிதி அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

இதற்கு காரணம் பயனாளிகள் மோசடிக்கு உள்ளாகுவதையும் அவர்கள் பெற்ற இ-மடாணி கிரெடிட் இழப்பதையும் தடுப்பதற்கு ஆகும் என நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

'பியேர்-டு-பியேர்' பரிமாற்றம் அல்லது இ-மடாணி கிரெடிட் டைப் பணமாகத் திரும்பப் பெறுதல் காரணமாக இழப்பு ஏற்பட்டால் நிதி அமைச்சகம் பொறுப்பேற்காது.

'பியேர்-டு-பியேர்' பரிமாற்றம் அல்லது பணமாகப் பெறுதல் தொடர்பான வழக்குகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட கணக்குகளைத் தடுப்பது மற்றும் இ-மடாணி பெறுநர்களின் கிரெடிட்டைப் பறிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், பணமில்லா கட்டண கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் இ-மடாணி திட்டம் தொடங்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"எனவே, இ-மடாணி கிரெடிட்டை 'பியேர்-டு-பியேர்' பரிமாற்றங்களுக்கோ அல்லது பணமாகத் திரும்பப் பெறுவதற்கோ பயன்படுத்த முடியாது.

MAE, Setel, ShopeePay மற்றும் Touch 'n Go eWallet அல்லது QR DuitNow ஆகிய 1.8 மில்லியன் சில்லறை விற்பனையாளர்கள் அல்லது நாடு முழுவதும் உள்ள வணிகங்களில் ஈடுபட்டுள்ள மின்-வணிகங்கள் மூலம் மட்டுமே இ-மடாணி கிரெடிட்டைப் பயன்படுத்த முடியும்.

"இ-மடாணி திட்டத்திற்கான பதிவு இன்று முதல் பிப்ரவரி 20, 2024 வரை திறந்திருக்கும். மேலும் B40 மற்றும் M40 குழுக்கள் உட்பட தகுதியான 10 மில்லியன் பெரியவர்கள் பயனடைவார்கள்" என்று அவர் கூறினார்.

https://manfaat.mof.gov.my/individu/eMADANI ஐப் பார்வையிடுவதன் மூலம் இ-மடாணி திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.