கிள்ளான்.நவ.30- சிலாங்கூர் மாநில இந்திய சமுக தலைவர்கள் ( KKI ) கௌரவிக்கப் பட்டனர். சிலாங்கூரில் மொத்தம் 56 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 62 பேர் இந்திய சமுக தலைவர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். 2021 முதல் 2023 வரையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் இவர்களின் சேவையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயிடு கௌரவித்தார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சி கிள்ளானில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடை பெற்றது. மொத்தம் 54 பேர் கலந்துக் கொண்டனர். 8 பேர் பல்வேறு காரணங்களால் கலந்துக் கொள்ள இயலவில்லை.
இன்றைய நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதிராவ் கலந்துக் கொண்டார்.








