கோலாலம்பூர், நவ 30: நாளை முதல் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ள பல பகுதிகளில் ஆபத்தான அளவில் தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகள் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பச்சோக், மச்சாங் மற்றும் பாசிர் புத்தே (கிளந்தான்) ஆகியவை ஆகும் என அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திரங்கானுவில் பெசுட், செத்தியூ மற்றும் கோலா நெருஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகள் என்று அறிக்கை கூறுகிறது.
– பெர்னாமா




