ECONOMY

சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 156 கண்காட்சியாளர்கள் கலந்து கொள்ள பதிவு

24 நவம்பர் 2023, 4:53 AM
சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 156 கண்காட்சியாளர்கள் கலந்து கொள்ள பதிவு

ஷா ஆலம், 24 நவ: சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) 2023 இல்  272  புத்தக காட்சியகங்களுக்கு பதிப்பக நிறுவனங்கள்  முன்பதிவு செய்துள்ளனர்.

இங்குள்ள ஷா ஆலம் சிட்டி கவுன்சில் மாநாடு மையத்தில்,  முன்பதிவு செய்ததில் 156 உள்ளூர் மற்றும் சர்வதேச வெளியீட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பிபிஏஎஸ்) இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முஹமட் கூறினார்.

"SIBF அமைப்பிற்கான ஏற்பாடுகள் இதுவரை சிறப்பாக உள்ளன. நேபாளம், இந்தோனேசியா, அஜர்பைஜான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, துருக்கி மற்றும் சீனா உள்ளிட்ட சர்வதேச வெளியீட்டு நிறுவனங்கள் மொத்தம் 20  காட்சிக்கூடங்கள் எடுக்கப்பட்டன.

இன்று ராஜா துன் உடா நூலக அறக்கட்டளையின் தொடக்க விழாவிற்கு பிறகு சந்தித்தபோது, "சிறு தொழில் முனைவோருக்கு  வணிகங்களை நடத்துவதற்கு  63 வர்த்தக  மேஜைகள்  மட்டுமே மீதம் உள்ளது" என்றார்.

டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெறவிருக்கும் SIBF இல் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் சிலாங்கூர் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சுவரொட்டிகள் போன்ற விளம்பரப் பொருட்கள், பொது நூலகங்கள் மற்றும் முகவர் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

RM500  வெள்ளி  அதிர்ஷ்டக் குலுக்கல் தவிர, புத்தக விற்பனை, கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.

கடந்த ஆண்டு முதன்முதலில் ஏற்பாடு செய்யப்பட்ட SIBF, சிலாங்கூர் புத்தகத் திருவிழாவின் தொடர்ச்சியாகும், இது மாநில அரசாங்கத்தால் 16 ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிப்ஸ்  2022 டில் பிரிட்டன், துருக்கி, தென் கொரியா, எகிப்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் சீனா உட்பட 225 உள்ளூர் மற்றும் சர்வதேச கண்காட்சி யாளர்களின் பங்கேற்பை  பெற்றது.

கூடுதலாக, நிகழ்வு 200,000 க்கும் அதிகமான வருகையாளர்களின் வருகையை பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் பெறப்பட்ட மொத்த விற்பனை மதிப்பு RM5 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.