அலோர் ஸ்டார், நவ 21 - இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மாசுகளை வெளியேற்றியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு சுற்றுச்சூழல் துறை மொத்தம் 934 அபராதங்களை வழங்கியது.
“டீசல் ஸ்டேடிக் சோதனை மூலம் மொத்தம் 20,687 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு மொத்தம் 271 அபராதங்கள் வழங்கப்பட்டன; பெட்ரோல் ஸ்டாடிக் சோதனை மூலம் 478 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 28 அபராதங்கள் வழங்கப்பட்டன; மோட்டார் சைக்கிள் சத்தம் சோதனை மூலம் 9,245 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 625 அபராதங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் கேஸ் சோதனை மூலம் 1,126 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 10 அபராதங்கள் வழங்கப்பட்டன என அதன் டைரக்டர் ஜெனரல் டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபர் கூறினார்.
"கருப்பு புகை அடர்த்திக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு (50 சதவிகிதம்) இணங்காத வாகனங்களுக்கும் அபராதம் வழங்கப்பட்டது" என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இந்த நடவடிக்கையில் சாலைப் போக்குவரத்துத் துறையும் (ஜேபிஜே) ஈடுபட்டது.
நேற்றைய நடவடிக்கையில், மொத்தம் 59 டீசல் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மூன்று வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் வழங்கப்பட்டு சரியான நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் அந்தந்த வாகனங்களில் மறுபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
“இந்த ஸ்டேடிக் ஆப்ஸ் நாடு முழுவதும் DOE ஆல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், ஏனெனில் நாட்டில் காற்றின் தரம் தொடர்ந்து பராமரிக்கப் படுவதையும், மக்களுக்கு எப்போதும் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதையும் உறுதி செய்வதே எங்கள் வேலை.
"சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய அதிகப்படியான புகையை வெளியேற்றுவதைத் தவிர்க்க அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்கள் தொடர்ந்து பராமரிக்கப் படுவதை எப்போதும் உறுதிசெய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா




