கோலாலம்பூர், நவ.17 - மலேசியாவின் உள்நாட்டுத் தேவை, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தக்கவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு சந்தையில் ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேம்பாடுகள் ஆகியவை மலேசியப் பொருளாதாரத்தை அடுத்த ஆண்டு நிலையான பாதையில் வைத்திருக்கக்கூடும் என்று முஹமாலட் வங்கி தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷிட் கூறினார்.
"அந்தக் குறிப்பில், பணவியல் கொள்கை நிலைப்பாடு உள்நாட்டு தேவைக்குத் தொடர்ந்து ஆதரவை வழங்கும், அதே நேரத்தில் விரிவாக்க நிதிக் கொள்கைகள் அதிக வளர்ச்சி செலவினங்கள் மூலம் உள்நாட்டு பொருளாதார இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும்.
"அபாயங்கள் முக்கியமாகப் புவிசார் அரசியல், பணவீக்கம் மற்றும் மேம்பட்ட நாடுகளில் உள்ள உயர் கொள்கை விகிதங்கள், அதாவது அமெரிக்க பொருளாதாரம் போன்ற வெளிப்புறத் துறையிலிருந்து வரும்," என்று அவர் பெர்னாமாவிடம் மூன்றாவது காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அறிவிப்பைத் தொடர்ந்து இவ்வறு கூறினார்.
சுற்றுலா தொடர்பான துறைகளில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம், தொழில்நுட்பத் துறையில் சாத்தியமான முன்னேற்றம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவை அடுத்த ஆண்டு நிலையான வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று அஃப்ஸானிசம் கூறினார்.
இரண்டாவது காலாண்டில் 2.9 சதவீதமாக இருந்த மலேசியப் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 3.3 சதவீதமாக விரிவடைந்துள்ளது.
முக்கிய இயக்கி உள்நாட்டு தேவை, இது 4.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது, முக்கியமாக நுகர்வோர் செலவு மற்றும் பொது முதலீடு முறையே 4.6 சதவிகிதம் மற்றும் 7.5 சதவிகிதம் ஆகும்.
இருப்பினும், வெளித் தேவை பலவீனத்தால், நிகர ஏற்றுமதிகள் மூன்றாம் காலாண்டில் 3.7 சதவீதத்திலிருந்து 22.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- பெர்னாமா




