NATIONAL

தீபாவளியை முன்னிட்டு இலவச டோல் கட்டணம் - 30 மில்லியன் ரிங்கிட் செலவை அரசு ஏற்கிறது

17 நவம்பர் 2023, 3:38 AM
தீபாவளியை முன்னிட்டு இலவச டோல் கட்டணம் - 30 மில்லியன் ரிங்கிட் செலவை  அரசு ஏற்கிறது

ஷா ஆலம், நவ.17: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச டோல் கட்டணம்

வழங்கியதில் 30 மில்லியன் ரிங்கிட் செலவை அரசு ஏற்கிறது என்று பொதுப்பணித்துறை

துணை அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் டோல் கட்டண உயர்வை தாமதப்படுத்தியதால் செலவான

RM 435 மில்லியனையும் அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது என்று டத்தோஸ்ரீ அப்துல்

ரஹ்மான் முகமட்

தெரிவித்தார்.

"டோல் ஒப்பந்தத்தின் கட்டண விகிதத்தை மறுசீரமைப்பது சம்மந்தப்பட்ட தரப்புக்கும்

அரசாங்கத்திற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியது.

"தீபாவளியின் போது, ​​30 மில்லியன் ரிங்கிட் செலவில் இரண்டு நாட்களுக்கு இலவச

டோல் கட்டணத்தை வழங்கியதற்காக, நிதியமைச்சராக இருக்கும் பிரதமருக்குச் சிறப்பு

நன்றியை பதிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அஹ்மட் ஃபட்லி ஷாரி (பிஎன் - பாசிர் மாஸ்) கேட்ட கேள்விக்கு

அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அப்துல் ரஹ்மான், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை ரத்து

செய்வதற்கான நடவடிக்கைக்கு விரிவான ஆய்வு தேவை, ஏனெனில் இது

செயல்படுத்தப்பட்டால் அரசாங்கம் RM400 பில்லியன் செலவை ஏற்க நேரிடும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.