ECONOMY

சிலாங்கூரில் மின்சார வாகனத் (EV) துறையை மேம்படுத்துவதற்காக ஒரு  ஆய்வகம் உருவாக்கப்படும்

15 நவம்பர் 2023, 8:59 AM
சிலாங்கூரில் மின்சார வாகனத் (EV) துறையை மேம்படுத்துவதற்காக ஒரு  ஆய்வகம் உருவாக்கப்படும்

ஷா ஆலம், நவ 14: சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகம் (Sidec) சிலாங்கூரில் மின்சார வாகன (EV) துறையை மேம்படுத்துவதற்காக ஒரு  ஆய்வகத்தை உருவாக்கவுள்ளது.

போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் கீழ் சிலாங்கூர் மொபிலிட்டி போர்ட்ஃபோலியோ மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். இதுவரை 386 யூனிட் சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

EV தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப 10,000 சார்ஜிங் நிலையங்கள் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) மூலம் நிறுவ இலக்கு வைக்கப்பட்டுள்ளது என யோங் காய் பிங் கூறினார்.

"EV தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி எல்லா திசைகளிலிருந்தும் செழித்து வருகிறது, இதில் (இப்போது) EV வாகனங்கள் விற்பனை செய்வது மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் திறமைகளை உருவாக்குவதும் அடங்கும்.

"ஏனெனில், EV வாகனங்களின் இறுதி இலக்கு தான் இயங்கி ஓட்டுதலும் ஆகும், இதற்கு AI இயக்கி அல்லது உதவியாக இருக்க வேண்டும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரி தொழில் போன்ற வசதிகள் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் சிலாங்கூரின் உற்பத்தித் துறையை உயர்த்தும் என்று காய் பிங் கூறினார்.

``கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், கப்பல்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் வேகமாக வளர்ந்து வரும் EV தொழில்துறையை உருவாக்குகின்றன, இதனால்  கார்பனற்ற  வாழ்க்கை முறைக்கு மாற உதவுகிறது," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.