ஷா ஆலம், நவ. 9: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் நடத்தும் மலிவு விற்பனையில் கோழி மற்றும் அரிசியை மலிவான விலையில் வாங்குவதற்கு மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோழி ஒரு கிலோகிராம் ரிங்கிட் 6.89 என்ற விலையிலும், 5 கிலோகிராம் பாதேக் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி ரிம19 விலையிலும் விற்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஸ்மா பிகேபிஎஸ் (செக்ஷன் 14 ஷா ஆலம்), எஹ்சான் பிகேபிஎஸ் (செக்ஷன் 9 ஷா ஆலம்), எஹ்சான் பிகேபிஎஸ் (ஜாலான் முஃபகாட் 1, தாமான் டத்தோ பண்டார், மேரு) மற்றும் கியோஸ்க் எஹ்சான் (சிலாங்கூர் வெருட் வெல்லி) ஆகிய இடங்களில் இந்த விற்பனை நடைபெறுகிறது.
"இரட்டை சேமிப்பு. பிகேபிஎஸ் கடையில் புதிய கோழியை வாங்குவோம், வாங்குவதற்கு வரம்பு இல்லை" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஐடில்பித்ரி பெருநாள் போது இரண்டு நாட்களில் மிகப்பெரிய மானிய விலையில் கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்ததன் மூலம் சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம், மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலிருந்து (MBOR) அங்கீகாரம் பெற்றது.
ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற்ற எஹ்சான் ஐடில்பித்ரி மெகா விற்பனையில் 30,000 கோழிகள் மற்றும் 10,712 முட்டை பலகைகள் விற்பனையானது.
மக்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக, வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மலிவு விற்பனை நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 1 முதல், மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனையை விரிவுபடுத்துவதற்காகச் செகி ஃப்ரெஷ் சூப்பர் மார்க்கெட்டுடன் பிகேபிஎஸ் இணைந்துள்ளது.




