NATIONAL

ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) உள்நாட்டு முதலீடுகளுக்காக RM97 பில்லியன் ஒதுக்கீடு

8 நவம்பர் 2023, 9:34 AM
ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) உள்நாட்டு முதலீடுகளுக்காக RM97 பில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், நவ. 8 - ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) இந்த ஆண்டு உள்நாட்டு முதலீடுகளுக்காக RM97 பில்லியன் அல்லது அதன் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 83 சதவீதத்தை  உள்நாட்டு  முதலீட்டுக்காக ஒதுக்கியுள்ளது என்று நிதி அமைச்சகம் (MOF) தெரிவித்துள்ளது.

2019 முதல் 2023 வரை உள்நாட்டு சந்தையில் முதலீடு செய்வதற்கான ஓய்வூதிய நிதியின் சராசரி ஆண்டு நிதி ஒதுக்கீடு 80 சதவீதத்தை தாண்டியுள்ளது என்று நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தது.

"ஊழியர் சேமநிதி வாரியம் உள்ளூர் வங்கிகளின் பணச் சந்தை உட்பட உள்ளூர் சந்தைக்கு அதன் வருடாந்திர நிதியில் பெரும் பகுதியை ஒதுக்குவதன் மூலம் உள்நாட்டு முதலீட்டிற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்.

"ஊழியர் சேமநிதி வாரியம் அதன் முதலீடுகளை நிலையானதாக மேம்படுத்துவதை உறுதிசெய்ய, அதன் முதலீட்டு குழு எப்போதும் மூலோபாய சொத்து ஒதுக்கீடு கட்டமைப்பால் வழிநடத்தப் படுகிறது, இது பல்வேறு சொத்து உடமைகள், புவியியல், ஆணைகள் மற்றும் உத்திகள் ஆகியவற்றில் முதலீட்டு சொத்துக்களை ஒதுக்குகிறது.,” நிதி அமைச்சகம் கூறினார்.

புத்ராஜெயா எம்பி டத்தோ முகமட் ராட்ஸி முகமட் ஜிடினின் கேள்விக்குப் எழுத்து மூலமாக பதிலளிக்கப் பட்டது.

1951இல் ஊழியர் சேமநிதி வாரியம் நிறுவப்பட்டது முதல் இப்போது வரை, அதன் முதலீட்டு சொத்துக்கள் மொத்தம் RM1.082 டிரில்லியன் ஆகும், இதில் 61.4 சதவீதம் உள்நாட்டு முதலீடுகளுக்கும் 38.6 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.