NATIONAL

எவரெஸ்ட் மலையேறும் போது நேர்ந்த துயரம்- வெளியுறவு அமைச்சின் அதிகாரி பார்த்திபன் மரணம்

31 அக்டோபர் 2023, 2:57 AM
எவரெஸ்ட் மலையேறும் போது நேர்ந்த துயரம்- வெளியுறவு அமைச்சின் அதிகாரி பார்த்திபன் மரணம்

புத்ராஜெயா, அக் 31- எவரெஸ்ட் மலையின் பேஸ் கேம்ப் எனப்படும்

அடிவார முகாம் நோக்கி பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சின்

அதிகாரி கடந்த திங்கள்கிழமை மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் கந்தசாமி (வயது 38) என்ற அந்த அதிகாரி நேற்று உள்ளுர்

நேரப்படி 2.30 மணியளவில் கோராக் ஷெப் எனுமிடத்தில் உயிரிழந்தார்.

பார்த்திபனின் உடலை கோராக் ஷெப் பகுதியிலிருந்து நேப்பாளத்

தலைநகர் காட்மண்டுவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில்

அந்நாட்டிலுள் மலேசிய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும்

காட்மண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் உடற்கூராய்வு

மேற்கொள்ளப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில்

கூறியது.

உடற்கூறு பரிசோதனை மற்றும் ஆவண தயாரிப்பு பணிகள் முற்றுப்

பெற்றவுடன் அவரது நல்லுடல் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும்

என்றும் அது தெரிவித்தது.

பார்த்திபன் உடலை மலேசியாவுக்குக் கொண்டு வரும் பணியை

நேப்பாளத்திலுள்ள மலேசியத் தூதரகம் மேற்கொள்ளும் என்றும் அந்த

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலமான பார்த்தின் குடும்பத்தினருக்கு வெளியுறவு அமைச்சு தனது

ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.