NATIONAL

 2022ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் போக்கு குறைந்துள்ளது

25 அக்டோபர் 2023, 8:46 AM
 2022ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் போக்கு குறைந்துள்ளது

ஷா ஆலம், அக் 25: மலேசியப் புள்ளியியல் துறையின் தரவுகளின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் போக்கு குறைந்துள்ளது என்று கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் துணை அமைச்சர் கூறினார்.

மேலும், 2020 இல் நகரத்தில் குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 3.2 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 2022யில் 2.4 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது என டத்தோ ரூபியா வாங் கூறினார்.

"அமைச்சகத்தின் திட்டங்களை செயல்படுத்துவது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகிறது, இது மக்களிடையே கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் போக்கு குறைந்து வருவதைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

இன்று டேவான் ராக்யாட்டில் வாய்மொழி கேள்வி அமர்வின் போது மந்த்ஸ்ரி நாசிப் (பிஎன்-தெங்கரா) கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார்.

உள்கட்டமைப்பு, பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு அம்சங்களில் கிராமப்புற மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அமைச்சகம் எப்போதும் வலியுறுத்துகிறது என்று ரூபியா விளக்கினார்.

கோத்தா சமரஹான் நாடளுமன்ற உறுப்பினர் கருத்துப்படி, கிராமப்புற வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றுவதும், இளைஞர்களின் இடம்பெயர்வுகளை மறைமுகமாக குறைப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

"அதில் பொருளாதார மற்றும் தொழில்முனைவோர் திட்டங்களை செயல்படுத்துதல், திறன் வாய்ப்புகள், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு துறையை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பை நிறைவு செய்தல் ஆகியவை அடங்கும்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.