NATIONAL

14 டிரக்குகளை உள்ளடக்கிய உதவித் தொடரணிகளின் இரண்டாவது குழு காசா பகுதிக்குள் நுழைந்தது

23 அக்டோபர் 2023, 9:19 AM
14 டிரக்குகளை உள்ளடக்கிய உதவித் தொடரணிகளின் இரண்டாவது குழு காசா பகுதிக்குள் நுழைந்தது

ரஃபா, அக் 23: மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஏற்றி சென்ற 14 டிரக்குகளை உள்ளடக்கிய உதவித் தொடரணிகளின் இரண்டாவது குழு ஞாயிற்றுக்கிழமை இரவு ரஃபா எல்லை வழியாக காசா பகுதிக்குள் நுழைந்தது.

முதல் தொகுதி சனிக்கிழமை காசாவிற்குள் நுழைந்தது. இதுவரை காசாவிற்கு வந்த உதவி டிரக்குகளின் எண்ணிக்கையை 34ஆக உள்ளது என பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அக்டோபர் 7 முதல் நடக்கும் சண்டையால் 1,903 குழந்தைகள் மற்றும் 1,024 பெண்கள் உட்பட குறைந்தது 4,651 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 14,245 பேர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சு கூறியது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.