ALAM SEKITAR & CUACA

படகு மூழ்கியது- கடலில் தத்தளித்த இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

5 ஜூன் 2023, 7:48 AM
படகு மூழ்கியது- கடலில் தத்தளித்த இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

ஷா ஆலம், ஜூன் 5- கோல லங்காட் கடல் பகுதியில் நேற்று விடியற்காலை மீன்பிடி படகொன்று மூழ்கியது. கடலில் தத்தளித்த இரு மீனவர்களை இழுவைப் படகொன்று பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.

கோல லங்காட் கடல் பகுதியில் நீரில் தத்தளித்த இரு மீனவர்களை இழுவைப் படகொன்று மீட்டது தொடர்பில் கிள்ளான் துறைமுகத்தின் கப்பல்களைக் கண்டறியும் மேலாண்மை முறைக்கு தகவல் கிடைத்ததாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் (ஏ.பி.எம்.எம்.) சிலாங்கூர் மாநில அமலாக்க இயக்குநர் கடற்பிரிவு கேப்டன் வி. சிவக்குமார் கூறினார்.

தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஏ.பி.எம்.எம்.மின் ரோந்து படகு இழுவைப் படகிலிருந்த அவ்விருவரையும் பிற்பகல் 2.00 மணி அளவில் மீட்டு வந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அஸ்மாடி சைமான் (வயது 60) மற்றும் அவரின் மகனான முகமது அஸ்லான் அஸ்மாடி (வயது 34) ஆகிய இருவரும் நேற்று மாலை 5.00 மணியளவில் மீன் பிடிப்பதற்காக கஞ்சோங் லாவுட் படகுத்துறையில் இருந்து கடலுக்கு புறப்பட்டுச் சென்றதாக சிவக்குமார்  சொன்னார்.

இன்று விடியற்காலை 3.15 மணியளவில் வீசிய கடும் புயல் காற்று காரணமாக படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவ்விருவரும் மீன் வைக்கும் தோம்பின் மூடியை பற்றியபடி கடலில் தத்தளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

கிளானாங் படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்ட அவ்விருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக பொது தற்காப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.