ECONOMY

மக்கள் வீடமைப்பு திட்டம் PPR சமூகங்களின்  மேம்பாட்டுக்கு  கூடுதல் RM35 மில்லியன் ஒதுக்கீடு

8 ஏப்ரல் 2023, 9:32 AM
மக்கள் வீடமைப்பு திட்டம் PPR சமூகங்களின்  மேம்பாட்டுக்கு  கூடுதல் RM35 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஏப்ரல் 8 - சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பொது வீட்டுத் திட்டங்களில் (பிபிஆர்) சமூகங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு 35 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்.

இந்த ஒதுக்கீடு  '' கித்தா உந்தோக் கித்தா'' நாம் நமக்கே (K2K) திட்டத்தின் மூலம் 50,000 PPR குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, அதில் சிக்கலுக் குரியதாக அடையாளம் காணப்பட்ட 12 வீட்டமைப்பு தொகுதிகள்  அடங்கும்.

"நாங்கள் ஏற்கனவே RM35 மில்லியனுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம், மேலும் மோசமான நிலையில் வீடுகள் இருப்பதால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். " நீண்ட காலம் எடுக்கும் வழக்கமான டெண்டர் பின்பற்றாமல் ,  வரையறுக்கப்பட்ட குறுகியகால டெண்டர் மூலம் செயல்முறையை விரைவுபடுத்த உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகத்துடன் (கேபிகேடி) நான் விவாதித்தேன்," என்று அன்வார் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் உள்ளாட்சி மேம்பாட்டுத் துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் ஆகியோரால் இன்று. K2K திட்டம், மற்றவற்றுடன், பொது குடியிருப்புப் பகுதிகளில் கட்டிட மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விஷயங்களில் கூட்டுப் பொறுப்புகளை  சுமக்கும் திறனை வளர்ப்பது மற்றும் சமூகத்தின் பங்கை வலுப்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய கோலாலம்பூர் கட்டமைப்பு திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், இம்மாதம் அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டிய திட்டம், சில திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் மே மாத இறுதி வரை தாமதப் படுத்த பட்டது என்றார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அடிப்படையில் கோலாலம்பூரை ஒரு முக்கிய அடையாளமாக மாற்றுவது மட்டுமல்லாமல், பசுமை மற்றும் தூய்மையின் அம்சங்களை வலியுறுத்தவும் இந்த திருத்தம் அவசியம் என்று அன்வார் கூறினார்.

அதனால்தான் (புதிய கோலாலம்பூர் திட்டத்திற்கு ஒப்புதல்) ஒத்தி வைக்கிறேன். உத்தேச திருத்தம் ஏற்கனவே உத்தியோகபூர்வ மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசியல்வாதிகள், நிறுவனங்கள், வல்லுநர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்தை பெறுவதற்கு முதலில் திட்டத்தை விநியோகிக்க விரும்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

பல தரப்பினரால் ஆய்வு செய்யப்படும் திட்டத்தை பெறுவதற்கான செயல்முறை புதியதல்ல என்று அன்வார் கூறினார்.

மற்றொரு வளர்ச்சியில், ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கு தயாராகும் வகையில் அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்குவதற்கான கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.