NATIONAL

வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்காகத் தொழில் திறன் மேம்பாட்டு மையம் தேவை

2 மார்ச் 2023, 11:37 AM
வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்காகத் தொழில் திறன் மேம்பாட்டு மையம் தேவை

கோலாலம்பூர், மார்ச் 2: மாநில அரசு சிலாங்கூர் தொழில் திறன் மேம்பாட்டு மையத்தை (STDC) நிறுவுவதன் மூலம் தொழில் திறன் கல்வி மற்றும் தொழிற் பயிற்சியைச் (TVET) செயல்படுத்த முடியும்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், மாணவர்கள் குறிப்பிட்ட திறன்களின் வேலை வாய்ப்புகளை நிரப்பும் வகையில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும்.

"நாட்டில் மனிதவளம் இல்லை என்றும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சில அமர்வுகள் வரும்போது, நம்பிக்கை மற்றும் சில திறன்களை வழங்குவதில் நாங்கள் சிக்கலை எதிர்கொள்கிறோம் என்று பலர் கூறுகிறார்கள்.

"உற்பத்தித் துறையில் 70 முதல் 80 சதவிகிதத்தை அடைய சிலாங்கூர் எஸ்டிடிசியை நிறுவியது. இப்போது சீமென்ஸ், ஆப்பிள், ஃபெஸ்டோ மற்றும் டசால்ட் சிஸ்டம் ஆகியவற்றின் ஒத்துழைப்பை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது" என்று நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023 பற்றி விவாதிக்கும் போது கூறினார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீருடின், கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிக ஒதுக்கீடு முக்கியமானது எனவும் அதற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

"பட்ஜெட் பொருளாதாரத் திட்டங்கள் உடன் தொடர்புடையது மட்டுமல்ல, அதில் அடிப்படை துறையான கல்வி துறைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

எஸ்டிடிசி என்பது மாநில அரசு மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ கீழ் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.