ஷா ஆலம், மார்ச் 2: அதிக கடன் சுமையுடன், போதிய வருமானம் இல்லாததால், பெரும்பாலானோர் வீடு வாங்க முடியாத நிலையில் உள்ளதாக, டேவான் ராக்யாட்டில் இன்று தெரிவிக்கப்பட்டது.
மலேசியத் தேசிய வங்கி (பிஎன்எம்) நடத்திய ஆய்வில் இந்த செய்தி கூறப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் தெரிவித்தார்.
“மேலும், பதிவு செய்யப்பட்ட வருமான விகிதம் 2.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு ஆண்டும் 4.1 சதவீதம் வரை வீட்டு விலைகள் அதிகரித்தன.
"விகிதம் சமநிலையற்றது மற்றும் அதனால், பலர் இன்னும் தங்கள் சொந்த வீட்டை வாங்க முடியாமல் உள்ளார்கள்," என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டில் கூறினார்.
மக்கள் தங்கள் சொந்த வீடுகள் வாங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் என்ன திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்பதை அறிய விரும்பும் ஒன் அபு பக்கரின் (பத்து பஹாட்-ஹரப்பான்) கேள்விக்கு அக்மல் இவ்வாறு கூறினார்.
ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், மக்கள் தரமான வீடுகளை சொந்தமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
அமைச்சகத்தின் புதிய நடைமுறைகளில் ஒன்று, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஏற்ப மக்களின் சராசரி வருமானத்தின் அடிப்படையில் வீட்டின் விலை நிர்ணைக்கப்பட வேண்டும்.
"மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வட்டாரங்களில் வீட்டு விலையை நிர்ணயம் செய்யும் டெவலப்பர்கள் மற்றும் ஹவுசிங் ஏஜென்சிகளுக்கும் இது வழிகாட்டியாக உள்ளது" என்று அவர் கூறினார்.








