NATIONAL

கோம்பாக் - பகாங் சாலை மேம்படுத்தப்பட வேண்டும் - மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

2 மார்ச் 2023, 2:54 AM
கோம்பாக் - பகாங் சாலை மேம்படுத்தப்பட வேண்டும் - மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

கோலாலம்பூர், மார்ச் 2: சாலை நெரிசலை சமாளிக்க கோம்பாக் முதல் பெந்தோங் வழியாக பகாங் வரை செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், 1915 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் பழைய சாலை, குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் கனரக வாகனங்களுக்கு மாற்றுப் பாதையாகும்.

"போக்குவரத்து அமைச்சகம் அல்லது பொதுப்பணி அமைச்சகம் சாலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் நேற்று பாராளுமன்றத்தில் கூறினார்.

அச்சாலையை மேம்படுத்துவது பொருளாதார மேம்பாட்டிற்கும், சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கும் உதவுவதோடு, சிலாங்கூர் மற்றும் பகாங் இடையப் பயணத் தொடர்பை மேம்படுத்தலாம் என்று அமிருடின் மேலும் கூறினார்.

"அதுமட்டுமில்லாமல், இந்தச் சாலை சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் ஒரு தேர்வாக அமைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பொது வசதிக்காக, இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன்," என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.