NATIONAL

டெலிகிராம் செயலியின் மூலம் ஒழுக்கமற்ற முறையில் தகவலைப் பரப்பியதற்காக ஆடவருக்கு RM8,000 அபராதம்

1 மார்ச் 2023, 9:28 AM
டெலிகிராம் செயலியின் மூலம் ஒழுக்கமற்ற முறையில் தகவலைப் பரப்பியதற்காக ஆடவருக்கு RM8,000 அபராதம்

கோலா திரங்கானு, மார்ச் 1: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெலிகிராம் செயலியின் மூலம் ஆபாசமான தகவல் அனுப்பியதற்காக வேலையில்லாத ஒருவருக்கு RM8,000 அபராதம் அல்லது நான்கு மாதச் சிறைத் தண்டனையை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விதித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அஹ்மத் ஃபைஸ் இப்ராகிம் (34) என்பவருக்கு நீதிபதி நஸ்லிசா முகமட் நஸ்ரி தண்டனை விதித்தார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், டெலிகிராம் செயலியின் சேவையைப் பயன்படுத்தி மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன், ஆபாசப் படங்கள் வடிவத்தில் தகவல்களைப் பரப்பியதாக அஹ்மத் ஃபைஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் செயல் 23 பிப்ரவரி 2021 அன்று பிற்பகல் 3.54 மணி அளவில் கோலா நெரஸில் உள்ள கம்போங் பாரு செபெராங் தாகிரில் நடந்துள்ளது.

அந்நபர் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 (சட்டம் 588) பிரிவு 233 (1) (a) இன் கீழ் அக்குற்றத்தைச் செய்துள்ளார். மேலும், அதே சட்டப்பிரிவு 233 (3)இன் கீழ் தண்டிக்கப்படலாம்.

அக்குற்றத்திற்கான தண்டனை அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும் தண்டனைக்குப் பிறகு குற்றம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளுக்கும் RM1,000 அபராதம் விதிக்கப்படலாம்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.