NATIONAL

சுல்தான் ஷராபுடின் அவர்களைச் சிலாங்கூர் போலீஸ் தலைவர் மரியாதை நிமித்தம் சந்தித்தார்

28 பிப்ரவரி 2023, 9:13 AM
சுல்தான் ஷராபுடின் அவர்களைச் சிலாங்கூர் போலீஸ் தலைவர் மரியாதை நிமித்தம் சந்தித்தார்

ஷா ஆலம், பிப் 28- சிலாங்கூர் மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஹூசேன் ஓமார் கான் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை நேற்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இங்குள்ள புக்கிட் காயாங்கான் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாநிலத் துணைப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவியும் உடனிருந்தார்.

மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக ஹூசேன் இம்மாதம் 24ஆம் தேதி நியமிக்கப்பட்டார். 52 வயதான அவர் 27 ஆண்டுகளாக அரச மலேசியப் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார்.

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழத்தில் தடய விசாரணை அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள ஹூசேன், புக்கிட் அமான் குற்றப்புனாய்வுத் துறையில் (உளவு/நடவடிக்கை) துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.