கோலாலம்பூர், பிப் 24- முதலீட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகச் சுபாங் மற்றும் பினாங்கு அனைத்துலக விமான நிலையங்கள் விரிவாக்கப்படும்.
கெடா, கூலிமில் 700 கோடி வெள்ளி செலவில் புதிய விமான நிலையத்தை நிர்மாணிப்பதை விட குறைந்த செலவில் அதிக பொருளாதார வளர்ச்சியை காண்பதற்குரிய வாய்ப்பினை இந்நடவடிக்கை ஏற்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அனைத்துலக வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் நோக்கில் தனியார் மூலம் கேரித் தீவில் துறைமுகத்தை உருவாக்கும் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








