NATIONAL

துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

11 பிப்ரவரி 2023, 8:37 AM
துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கோலாலம்பூர், பிப் 11: கடந்த திங்கட்கிழமை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகனிடம் தனது இரங்கலையும் பிரார்த்தனையையும் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதியை தொடர்பு கொண்ட தகவலைப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"மலேசிய அரசாங்கம் இரண்டு ஸ்மார்ட் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களைத் துருக்கிக்கு அனுப்பியுள்ளது மற்றும் ஒரு கள மருத்துவமனையை நிறுவியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மக்கள் நிதி திரட்டியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

புதன்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில், மலேசியா 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (RM8.6 மில்லியனுக்கும் அதிகமான) துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக வழங்கும் என்று அறிவித்தார்.

மலேசிய ஆயுதப்படை (ATM) மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக ஆறு வார காலத்திற்கு மலேசிய மேடன் மருத்துவமனை (HMM) நிலை மூன்றிலிருந்து துருக்கிக்கு ஊழியர்கள் மற்றும் உபகரணங்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான ஒரு வலுவான நிலநடுக்கம் தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டது. இரு நாடுகளிலும் 23,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.