கோலாலம்பூர், பிப் 2 - தலைநகரில் உள்ள சுவிடன் மற்றும் டச்சு தூதரகங்களுக்குத் முன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள்தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 10 பேரிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரின் வாக்குமூலங்களும் சமீபத்தில் எடுக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.
அடுத்து வரும் நாட்களில் மேலும் பலர் விசாரணைக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாநகர காவல்துறையின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் ஸ்டாக்ஹோமில் புனித குர்ஆன் நகல் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஒற்றுமை பேரணி என்ற பெயரிலும் இரு ஆர்ப்பாட்டங்கள்
நடத்தப்பட்டதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.
இரண்டு கூட்டங்கள் தொடர்பாக 2021 அமைதிப் பேரணி சட்டப் பிரிவு 9(5)ன் கீழ்
இரண்டு விசாரணை அறிக்கைகளைத் போலீசார் திறந்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார்.
- பெர்னாமா
NATIONAL
இரு கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் 10 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
2 பிப்ரவரி 2023, 6:43 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
நிறுவன ஆலோசகராக கணவர் நியமனம்- பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக மனைவி மீது குற்றச்சாட்டு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மலேசியா வருகிறார்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




