NATIONAL

பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடெனிடமிருந்து வாழ்த்துச் செய்தி

28 ஜனவரி 2023, 7:53 AM
பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடெனிடமிருந்து வாழ்த்துச் செய்தி

கோலாலம்பூர், ஜன 28: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடெனிடமிருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்றார். ஜோ பிடன் கடந்த நவம்பரில் 15வது பொதுத் தேர்தலில் (GE15) காட்டப்பட்ட மலேசியாவின் ஜனநாயகத்தின் மகத்துவத்தைப் பாராட்டினார்.

டிஜிட்டல் பொருளாதாரம், காலநிலை நெருக்கடி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மலேசியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதியும் வெளிப்படுத்தியதாக அன்வார் கூறினார்.

"அனைத்து மக்களின் பொதுவான நலனுக்காக அவருடன் (பிடென்) பணியாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று பிரதமர் ஒரு முகநூல் பதிவில் கூறினார், மேலும் அவர் அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்தையும் அதில் பதிவேற்றினார்.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயகம் இதுவரை எதிர்கொள்ளாத புதிய சவால்களைத் தற்போது எதிர் கொள்வதாகவும், ஜனநாயகம் வெற்றியைத் தரும் என்பதை மலேசியத் தேர்தல் காட்டுகிறது என்றும் பிடென் கூறினார்.

"மில்லியன் கணக்கான மலேசியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். அதில் பலர் முதல் முறையாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியர்கள் உலகெங்கும் வாழும் மக்களை அவர்கள் அனுபவிக்கும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை ஊக்குவிக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, எப்போதும் வளர்ந்து வரும் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் பிடென் வலியுறுத்தினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.