ALAM SEKITAR & CUACA

கோலா சிலாங்கூர் பெர்மாதாங் செடெபாவில் ஏற்படும் உயர் அலையின் நிகழ்வைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

23 ஜனவரி 2023, 7:55 AM
கோலா சிலாங்கூர் பெர்மாதாங் செடெபாவில் ஏற்படும் உயர் அலையின் நிகழ்வைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஷா ஆலாம், ஜன 23: ஜனவரி 22 முதல் வியாழன் வரை கோலா சிலாங்கூர் பெர்மாதாங் செடெபாவில் ஏற்படும் உயர் அலையின் நிகழ்வைத் தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோலா சிலாங்கூர் மாவட்ட/நில அலுவலகம், பெர்மாதாங் செடெபா நிலையத்தின் நீர்மட்டம் நாளை இரவு 8 மணிக்கு 4.6 மீட்டரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முகநூல் மூலம் பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில், அதே நிலையத்தில் கடல் மட்டம் புதன்கிழமை 4.5 மீட்டர் உயரமும், 4.4 மீட்டர் (வியாழன்) உயரமும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேசியப்பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) முகநூல், கிள்ளான், பண்டா மாறன் நிலையத்தில் கண்காணிப்பு, ஆபத்தான அளவான 2.20 மீட்டர் ஆகும்; தற்போது அது 2.05 மீட்டர் நீர்மட்ட அளவீடுகளைக் காட்டியுள்ளது எனத் தெரிவித்தது.

கனமழை தொடரும் பட்சத்தில், சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜே பி எஸ்) நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

கிள்ளான், பெட்டாலிங் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் வெள்ள அபாயத்தை சந்திக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளதாக முகநூல் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.