NATIONAL

பட்ஜெட் 2023 இல் சேவைத் துறையில் அரசாங்கம் கவனம் செலுத்தும் -பிரதமர்

17 ஜனவரி 2023, 4:48 AM
பட்ஜெட் 2023 இல் சேவைத் துறையில் அரசாங்கம் கவனம் செலுத்தும் -பிரதமர்

புத்ராஜெயா, ஜன 17: பிப்ரவரி 24 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் 2023 இல் சேவைத் துறையில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நிதியமைச்சரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பசுமை தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PKS) ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, அரசாங்கக் கொள்கையானது PKS துறையின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அது அதிக திறன் கொண்டது மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை உள்ளடக்கியது.

"சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக நாம் சோர்வடைய கூடாது. பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற புதிய துறைகளை மேம்படுத்த நாம் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையாடல் கவுன்சிலில் இன்று முக்கிய உரையை ஆற்றிய போது, "இதுவரையிலான எங்கள் அணுகுமுறை தேசியப் பொருளாதாரத்தின் தூணாக இருக்கும் PKS மீது கவனம் செலுத்தவில்லை,``எனக் குறிப்பிட்டார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.