NATIONAL

பத்தாங் காலியில் மலைச்சாரலை வலுப்படுத்தக் கூடுதலாக வெ.2.1 கோடி ஒதுக்கீடு- மந்திரி புசார் தகவல்

16 ஜனவரி 2023, 9:19 AM
பத்தாங் காலியில் மலைச்சாரலை வலுப்படுத்தக் கூடுதலாக வெ.2.1 கோடி ஒதுக்கீடு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜன 16- பத்தாங் காலி, ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம்

பொழுதுபோக்கு முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து

அப்பகுதியில் உள்ள மலைச்சாரலை வலுப்படுத்தும் பணிக்காக மாநில

அரசு கூடுதலாக 2 கோடியே 11 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

மாநில ஆட்சிக்குழுவிடம் பொதுப்பணித்துறை சமர்பித்த அறிக்கையின்

அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ

அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மலைச்சாரலை வலுப்படுத்தும்

பணிக்காக மேலும் 2 கோடியே 11 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ய

மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது என்று அவர் சொன்னார்.

மேலும், பொழுது போக்கு முகாமிடும் நடவடிக்கை மற்றும் வர்த்தகம்

தொடர்பில் வழிகாட்டியைத் தயாரிப்பதில் மாநில அரசு ஊராட்சி

மன்றங்களுடன் ஒத்துழைப்பு நல்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முகாம்களில் பொழுது போக்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்

சிலாங்கூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த வழிகாட்டி

தயாரிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அந்த பொழுதுபோக்கு முகாம்

பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 31 பேர் உயிரிழந்ததோடு மேலும் 61 பேர்

காப்பாற்றப்பட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.