NATIONAL

2,159 கிலோ எடையுள்ள பட்டாசுகள் ராயல் மலேசியன் சுங்கத் துறையால் (ஜேகேடிஎம்) பறிமுதல் செய்யப்பட்டன

10 ஜனவரி 2023, 8:43 AM
2,159 கிலோ எடையுள்ள பட்டாசுகள் ராயல் மலேசியன் சுங்கத் துறையால் (ஜேகேடிஎம்) பறிமுதல் செய்யப்பட்டன

பாசீர் மாஸ், ஜனவரி 10: அண்டை நாடுகளில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,159 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான பட்டாசுகள் ராயல் மலேசியன் சுங்கத்துறை (ஜேகேடிஎம்) நேற்று பாசிர் புத்தேவில் உள்ள கம்போங் பாடாங் பாக்ட் அமாட்டில் பறிமுதல் செய்தது.

அதன் இயக்குனர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் கூறுகையில், பொதுத் தகவல் மற்றும் நெருக்கமான கண்காணிப்பின் அடிப்படையில், ரந்தாவ் பஞ்சாங் அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டுக் குழு இரவு 9.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மூன்று டன் லாரி மற்றும் நான்கு சக்கர வாகனத்தை தடுத்து வைத்துள்ளது.

ஆனால், அதிகாரிகள் இருப்பதை உணர்ந்தவுடன் லாரி மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட RM35,631.75 மதிப்புள்ள பட்டாசுகள் சீனப் புத்தாண்டை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்குக்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன," என்று அவர் இன்று, ரத்தாவ் பஞ்சாங் ஜேகேடிஎம் அமலாக்க அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

"இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967யின் பிரிவு 135(1)(e) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்" என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.