NATIONAL

சிலாங்கூர் தன்னார்வலர்கள் மற்றும் விரைவு நடவடிக்கை குழு உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து கிளந்தானில் வெள்ள நிவாரணப் பணியை மேற்கொள்ளும்

28 டிசம்பர் 2022, 9:26 AM
சிலாங்கூர் தன்னார்வலர்கள் மற்றும் விரைவு நடவடிக்கை குழு உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து கிளந்தானில் வெள்ள நிவாரணப் பணியை மேற்கொள்ளும்

கோத்தா பாரு, டிச 28: சிலாங்கூர் தன்னார்வலர்கள் (சேர்வ்) மற்றும் விரைவு நடவடிக்கை குழு (பன்தாஸ்) ஆகியவை உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஓக்கள்) இணைந்து அடுத்த ஜனவரியில் கிளந்தானில் வெள்ளத்திற்குப் பின் நிவாரணப் பணியை மேற்கொள்ளும்.

பாதிக்கப்பட்டவர்களின் குடியேற்றம், தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சேதமடைந்து சாலைப் பணிகள் என சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதால், இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

வெள்ளத்திற்குப் பின் சுத்தப்படுத்தும் பணிகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதால், சுமூகமாக நடைபெறும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"எனவே, ஜனவரியில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மாநிலத்தின் வெள்ளத்திற்குப் பின் நிவாரணத் திட்டத்தை ஏற்பாடு செய்ய சர்வ் மற்றும் பந்தாஸ், உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.

வெள்ளத்திற்குப் பின் மேற்கொள்ளப்போகும் கிளந்தான் திட்டத்தின் ஒத்துழைப்புக்கான பங்களிப்பாக ரிம 50,000-ஐ அமிருடின் சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

சிலாங்கூர் அரசு, வெள்ளத்திற்குப் பின் மனிதாபிமான உதவிகளை எந்த வடிவத்திலும் சேவை செய்யத் தயாராக இருப்பதாக அமிருடின் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.