NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம்

26 டிசம்பர் 2022, 6:04 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம்

கோத்தா கினபாலு, டிச 26: நாடு முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தெக்குன் நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா போன்ற கடன்களை திருப்பிச் செலுத்தும் தவணையை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனெடிக் கூறுகையில், தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சி களிடமிருந்து கடன்களை திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைக்க பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். இது அவர்களின் வணிகங்களை மீட்டெடுக்க உதவும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்றார். இதனால் அவர்கள் பேரிடர் தொடர்பான விஷயங்களையும் சமாளிக்க முடியும் என்றார்.

“இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழில்முனைவோருக்கு உதவுவது அமைச்சகத்தின் கொள்கையாகும்,” என்று அவர் இன்று அமைச்சின் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட கூட்டுறவுகளுக்கு உதவுவதற்காகக் கூட்டுறவு ஆணைக்குழுவின் ஊடாக தனது அமைச்சு விரைவில் பேரிடர் நிதியத்தை நிறுவவுள்ளதாக எவோன் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.