NATIONAL

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

25 டிசம்பர் 2022, 9:49 AM
சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

ஷா ஆலம், டிச 25: சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் 0 டன் துர்நாற்றம் மாசு அளவீட்டை தொடர்ச்சியாக மூன்று முறை பதிவு செய்ததால் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

"உடனடியாக, சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பயனர்களுக்குப் படிப்படியாக விநியோகிக்கப்படும்" என இன்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் இரண்டு டன் துர்நாற்றம் மாசு அளவீடு இருப்பதாகத் தெரிவித்தது.

`` இந்நிலையத்தில் மாசுபாட்டின் அளவு இன்று அதிகாலை 1 மணி முதல் குறையத் தொடங்கியுள்ளது மற்றும் நதியில் மாசுபாட்டினால் ஏற்பட்டுள்ள அனைத்து விளைவுகளையும் சரி செய்த பிறகே 0 டன் ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது"

துர்நாற்ற மாசு சம்பவத்தைத் தொடர்ந்து, 472 பகுதிகள் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையைச் சந்தித்தன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.