NATIONAL

புத்ராஜெயாவில் 300,000 ரிங்கிட்க்குக் கீழ் உள்ள குடியிருப்புகளுக்கான மதிப்பீட்டு வரியில் 30 சதவீதம் தள்ளுபடி

23 டிசம்பர் 2022, 7:51 AM
புத்ராஜெயாவில் 300,000 ரிங்கிட்க்குக் கீழ் உள்ள குடியிருப்புகளுக்கான மதிப்பீட்டு வரியில் 30 சதவீதம் தள்ளுபடி

ஷா ஆலம், டிச. 22: புத்ராஜெயாவில் 300,000 ரிங்கிட்க்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கான மதிப்பீட்டு வரியை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 30 சதவீதம் குறைப்பதாகப் பிரதமர் அறிவித்தார்.

இப்பகுதியில் மலிவு விலையில் வீடுகள் வைத்திருக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடையவர்களின் சுமையை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

"புத்ராஜெயாவில் வசிக்கும் மக்களிடமிருந்து வரும் புகார்களையும் கருத்துகளையும் கேட்டேன், சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒப்பிடும்போது அவர்களின் குடியிருப்பு வளாகங்களில் விதிக்கப்படும் மதிப்பீட்டு வரி அதிகமாக உள்ளது.

"அதிகாரிகளிடமிருந்து கூடுதல் தகவலைப் பெற்ற பிறகு, 300,000 ரிங்கிட்க்குக் கீழ் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மொத்த மதிப்பிடப்பட்ட வரியில் இருந்து 30 சதவிகிதம் கழிக்கப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

புத்ராஜெயா கார்ப்பரேஷனால் மேற்கொள்ளப்பட்ட மறுமதிப்பீட்டின் மூலம், 2017ல் முடிக்கப்பட்ட 8,500 குடியிருப்புப் பகுதிகள் இந்த திட்டத்திற்கு உட்பட்டுள்ளன என்று பிரதமர் விளக்கினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.