NATIONAL

முகாம் நடவடிக்கைகளின் விதிமுறைகள் மற்றும் அதன் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் அமல்படுத்தப்படும்

22 டிசம்பர் 2022, 10:02 AM
முகாம் நடவடிக்கைகளின் விதிமுறைகள் மற்றும் அதன் தொடர்பான வழிகாட்டுதல்கள்  விரைவில் அமல்படுத்தப்படும்

பெட்டாலிங் ஜெயா, டிச 22: முகாம் நடவடிக்கைகளின் விதிமுறைகள் மற்றும் அதன்

தொடர்பான வழிகாட்டுதல்கள் ஒரு சட்டமாக அல்லது சுற்றறிக்கையாக

அமல்படுத்தப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மீன்பிடித்தல் மற்றும் மலை ஏறுதல் நடவடிக்கைகள் உட்பட அனைத்து அம்சங்களையும்

வழிகாட்டுதல்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

கூறினார். இதனால் வாழ்க்கையின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

மாநில அரசுக்கும் முகாம் தளங்களின் உரிமையாளர்களுக்கும் அல்லது

அமைப்பாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டம் விரைவில் நடைபெறும், இதன் வழி

வழிகாட்டுதல்களை இறுதி முடிவு செய்ய முடியும் என்றார்.

"இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரத் தேவையில்லை என்றால், பிப்ரவரியில் இந்த

வழிகாட்டுதல்களை அறிவிப்போம். பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க தெளிவான

வழிகாட்டுதல்களை மாநில அரசு விரும்புகிறது," என்று அவர் கூறினார்.

டிசம்பர் 16 அன்று பத்தாங் காலியில் அதிகாலை 2.42 மணியளவில் நிலச்சரிவு

ஏற்பட்டது. அதில் 94 பேரில் 61 பேர் உயிர் பிழைத்து வேளையி;ல் 30 பேர்

உயிரழந்துள்ளனர். மேலும், மூவர் இன்னும் காணவில்லை.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.