NATIONAL

மின்சாரக் கட்டணம் உயராது - பிரதமர்

20 டிசம்பர் 2022, 9:57 AM
மின்சாரக் கட்டணம் உயராது - பிரதமர்

ஷா ஆலம், டிச.20: தற்போதைய வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என அரசு வலியுறுத்துகிறது.

பில்லியன் கணக்கான லாபம் ஈட்டும் பெரும் நிறுவனங்களின் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

“மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான முடிவு, முன்பே அமைச்சர்கள் குழுவால் எடுக்கப்பட்டது. ஆனால், அது கொள்கைக்கு எதிரானது. மக்களின் அன்றாட செலவில் சுமையை அதிகரிக்கும் வகையில் கட்டணத்தை உயர்த்துவது எப்படி? அதனால், மறுபரிசீலனை செய்யும் போது, நாங்கள் அம்முடிவை தொடர தயாராக இல்லை" என்று அவர் கூறினார்.

டிசம்பர் 14 அன்று சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், வெளிநாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.