ALAM SEKITAR & CUACA

கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்குச் சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

20 டிசம்பர் 2022, 7:55 AM
கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்குச் சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஷா ஆலம், டிச 20: தற்போதைய வெள்ளப் பேரிடரை எதிர் கொண்டுள்ள மாநிலங்கள் கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

#கித்தாசிலாங்கூர் 2022 வெள்ள உதவி நன்கொடை, பேரழிவால் பாதிக்கப்பட்ட வர்களின் அவலத்திற்கு அனுதாப அடையாளம் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மக்கள் படும் துயரங்களுக்குச் சிலாங்கூர் அனுதாபம் கொள்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் 25,353 பேரும், திராங்கானுவில் 37,021 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (நட்மா) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, கிளந்தான், திராங்கானு, பகாங், பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,415 ஆக அதிகரித்துள்ளது என்று நட்மா ட்விட்டரில் தெரிவித்தது.

ஐந்து மாநிலங்களில் மொத்தம் 458 தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.