NATIONAL

சிறப்புக் குழு அமைப்பதற்கு முன் நிலச்சரிவு சம்பவம் தொடர்பான அறிக்கையை முதலில் ஆய்வு செய்யும் - பிரதமர்

17 டிசம்பர் 2022, 10:04 AM
சிறப்புக் குழு அமைப்பதற்கு முன் நிலச்சரிவு சம்பவம் தொடர்பான அறிக்கையை முதலில் ஆய்வு செய்யும் - பிரதமர்

உலு சிலாங்கூர், டிச.17: சிறப்புக் குழு அமைப்பது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவம் தொடர்பான அறிக்கையை அரசு முதலில் ஆய்வு செய்யும்.

ஆராய்ச்சி செய்யாமல் பாதுகாப்புப் படைகளை வழிநடத்தத் தனது தரப்பு விரும்பவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“எந்தவொரு குழுவையும் அமைப்பதற்கு முன்னர், தலைமை காவல்துறை மற்றும் தீயணைப்பு பிரிவினரின் ஆரம்ப அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும்.

 

"நான் அவர்களின் அறிக்கைக்கு முன் எதையும் பரிந்துரைக்க விரும்பவில்லை, காத்திருங்கள். நடவடிக்கை எடுப்பதற்கு முன் அந்த அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்” என இன்று இரவு மண்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தீயணைப்புப் படை, காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை, மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் மலேசியச் சிறப்புத் தேடல் மற்றும் மீட்புக் குழு (SMART) ஆகியவற்றால் தற்போது தேடுதல் மற்றும் மீட்பு (SAR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.