NATIONAL

மெட்மலேசியா: பாடாங் செராயில் நாளை காலை வானிலை தெளிவாக இருக்கும் வேளையில்,  டியோமனில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

6 டிசம்பர் 2022, 6:59 AM
மெட்மலேசியா: பாடாங் செராயில் நாளை காலை வானிலை தெளிவாக இருக்கும் வேளையில்,  டியோமனில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், டிச 6: கெடாவின் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில்  உள்ள வாக்குப்பதிவுப் பகுதியில் நாளை காலை தெளிவான வானிலை நிலவும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அதே வேளையில் பகாங் டியோமன் மாநிலச் சட்டமன்றத்தில் (DUN), காலையில் மழை பெய்யும் பிறகு  பிற்பகலில் வானிலை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியாத் தலைவர் முஹம்மது ஹெல்மி அப்துல்லா கூறுகையில், வாக்காளர்கள் சுற்றியுள்ள சூழ்நிலை குறிப்பாக வானிலை குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

"பல்வேறு அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வானிலை தகவல், முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை (மெட்மலேசியா) வெளியிடுவதன் மூலம் உங்கள் பயணத்தை முடிந்தவரை சிறப்பாக திட்டமிடுங்கள்`` எனக் கேட்டுக் கொண்டார்.

“அதிகாலையில் வானிலை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டால், முன்கூட்டியே வாக்களிக்க வெளியே செல்லுங்கள் காரணம் வானிலை விரைவாக மாறக்கூடும் என்பதால் தாமதிக்க வேண்டாம்,`` என்று அவர் இன்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் டியோமன் மாநிலச் சட்டமன்றத்தில் நாளை வாக்குப்பதிவு செயல்முறை மாலை 6 மணிக்கு முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.