ALAM SEKITAR & CUACA

ஆறு மாநிலங்களில் 1,301 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சிலாங்கூரில் எண்ணிக்கை குறைந்துள்ளது

23 நவம்பர் 2022, 7:17 AM
ஆறு மாநிலங்களில் 1,301 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சிலாங்கூரில் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர் நவ 23;- இன்று காலை மணி 8 நிலவரப்படி, 6 மாநிலங்களில் 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,301 பேர்  தற்காலிகத் தங்கும் மையங்களில் உள்ளனர். 

பேராகில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தனது முகநூலில் வெளியிட்டது. அதாவது 5 மாவட்டங்களில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 780 பேர் 9 தற்காலிகத் தங்கும் மையங்களில் தங்கியுள்ளதாக அப்பதிவு காட்டுகிறது. 

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390ஆக குறைந்துள்ளது. 111 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள்  இரண்டு மாவட்டங்களில் உள்ள 9 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

நேற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் மாநிலங்கள் கிளந்தான் (30), கோகூர் (62) மற்றும் மலாக்கா (11) ஆகும். மேலும், பகாங்கில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேராகப் பதிவாகியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே தற்காலிகத் தங்கும் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 நேற்று இரவு மணி 8 நிலவரப்படி, 4 மாநிலங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,251 பேர் இன்னும் தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.