ECONOMY

அடுத்த மாதம் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி- 250 நிறுவனங்கள் பஙகேற்பு

21 நவம்பர் 2022, 12:21 PM
அடுத்த மாதம் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி- 250 நிறுவனங்கள் பஙகேற்பு

ஷா ஆலம், நவம்பர் 21 - சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சியின் இரண்டாவது தொடர் அடுத்த மாதம் செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாயக் கண்காட்சி  மையத்தில் (மேப்ஸ்)நடைபெற உள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி மொத்தம் 250 நிறுவனங்கள் மற்றும் துறைகள் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த கண்காட்சியில் 15,000 வேலை தேடுபவர்களை ஈர்ப்பதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம், இந்த கண்காட்சி நடைபெறும்   தேதி மற்றும் நேரம் பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் பெரும் பயனளிக்கும் என்பதால், அதிகமான முதலாளிகள் இதில பங்கேற்க வேண்டும் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது.

சிலாங்கூர் இளைஞர்கள் பல்வேறு பதவிகள் மற்றும் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஷா ஆலம்  எம்.பி.எஸ்.ஏ  மாநாட்டு மையத்தில் கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 12 வரை  நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சியில் மாநில அரசு நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  பங்கேற்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.