சுபாங்.நவ.17- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடு முழுவதிலும் நடத்தும் சூறாவளி பிரச்சாரத்தில் நேற்று டத்தோ ரமணனுக்கு ஆதரவாக பேசிய கூட்டத்தில் நெல் விவசாயிகள் தேசிய முன்னணி அரசு கைவிட்டுவிட்டது. விவசாயிகள் பெரும்பான்மையானவர்கள் மலாய்க்காரர். இவர்களுக்கு உதவ வில்லை என்று தேசிய முன்னணி மற்றும் தேசிய கூட்டணி தலைவர்களை கடுமையாக சாடினார்.
இதே போல் செம்பனை தோட்ட துறையில் பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் உள்ளனர். இவர்களின் எதிர்காலத்தை பற்றியும் செயல் படுகின்றனர் ஆளுங்கட்சியினரை கடுமையாக சாடினார்.
இப்படி மலாய்க்காரர்களுக்கு உதவாத இவர்களை புறநகர் பகுதிகளில் உள்ள மலாய்க்காரர்கள் இன்னும் ஏன் ஆதரிக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.
ஆக மொத்தத்தில் திரளாக அணி திரண்டிருந்த மலாய்க்காரர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்து டத்தோ ரமணனின் வெற்றிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.








