ALAM SEKITAR & CUACA

மலாக்காவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது

31 அக்டோபர் 2022, 3:56 AM
மலாக்காவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது

மலாக்கா, அக் 31 -  மலாக்கா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின்     எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியளவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேராக குறைந்தது. நேற்று மாலை 4.00 மணி நிலவரப்படி  ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர்.

அலோர்காஜா கம்போங் பிளிம்பிங் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக நிவாரண மையத்தில் அவர்கள் தங்கியுள்ளதாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் ஒரு அறிக்கையில் கூறியது.

அவர்கள் கம்போங் பாஞ்சோர், கம்போங் பெரிங்கின், கம்போங் புலாவ் மற்றும் கம்போங் பெலிம்பிங் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என்று அது தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.